Monday, June 20, 2011

சுதந்திர கலை

கருத்தென்பார்
சுதந்திரம் என்பார்
கருத்து சுதந்திரம் என்று சொல்லிடுவார்

பெண்ணியம் என்பார்
விடுதலை என்பார்
பெண் விடுதலை என்றும் பேசிடுவார்

ஆனால்
சொல்லத்துடிக்கும்
ஓராயிரம் கருத்துக்களை
சொல்லாமல் சொல்லும் கலையும் வேண்டுமென்பார்

இதில் எதை பின்பற்ற?
எதுவே சரியென ஏற்க?
சொல்லடி சிவசக்தி,
நான் மானிடத்தில் கரைந்து விடு முன்! 

No comments: